டாஸ் மாக்கில் குவிந்த குடிமகன்கள்; ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல்கள் வழங்கி மது விற்பனை….!

தமிழ்நாட்டில் டாஸ் மாக்கில் குவிந்த குடிமகன்களுக்கு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல்கள் வழங்கி மது விற்பனை செய்யும் தொடர்பிலாக காணொளி வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் நீக்கப்பட்டுள்ள நிலையில் இராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பந்தல் அமைத்து கொரோனா பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மதுபானம் வாங்க வருவோர் வரிசையாக வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் , சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முக கவசங்களை உரிய முறையில் அணிந்து , குழப்பங்களை ஏற்படுத்தாது வருமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.