யாழில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரசாங்க அலுவலகர்…!

யாழில் அரச அலுவலகம் ஒன்றில அபிவிருத்தி அலுவலராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது 6 மாத கர்ப்பிணியாகவுள்ள தனது தங்கையையும் கர்ப்பமாக்கிய கணவனையும் என்ன செய்வது எனத் தெரியாது ஆசிரியையாகவுள்ள மனைவி குழம்பிய நிலையில் உள்ளார். காரணம் கணவன் சொன்ன சீரடிசாய்பாவா கதைதான்.

யாழ் நல்லுார் பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும் குறித்த கணவனும் மனைவியும் யாழ் நாவலர் வீதியில் உள்ள சீரடிபாவாவின் தீவிர பக்தர்கள் ஆவார். இவர்கள் திருமணம் முடித்து 3 வருடங்கள் ஆன நிலையிலும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தென்மராட்சிப் பகுதியில் உள்ள மனைவியின் சீதன வீட்டில் மனைவியின் தங்கை மற்றும் பெற்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். சனி, ஞாயிறுகளில் இவர்கள் அங்கு சென்று தங்கி வருவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள். இந் நிலையில் 24 வயதான மனைவியின் தங்கை தலைசுற்று மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அவர் கர்ப்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது. கர்ப்பத்துக்கு அத்தானே காரணம் என மனைவியின் தங்கை கூறியுள்ளார். இது தொடர்பாக மனைவி தனது கணவனை விசாரித்த போது அவர் பின்வருமாறு கூறியுள்ளாராம்.

“தான் நித்திரையில் இருக்கும் போது சீரடிபாபா கனவில் வந்து உனது வம்சம் உனது மனைவியின் வயிற்றில் உருவாகாது. மனைவயின் தங்கையின் வயிற்றிலேயே உருவாகும். இதனை மனைவிக்கு கூறி சமாதானப்படுத்தி அந்தக் குழந்தையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். மனைவியின் தங்கையின் கருப்பையை நீ வாடகைக்கு எடுத்துக் கொள்… இது தப்பில்லை. அப்புறம் அவளுக்கு வேறு கலியாணம் கட்டி வை” என சீரடிபாவா கூறியதாக மனைவிக்கு கதை விட்டுள்ளார்.